tamilnadu

img

B.P. மாத்திரைகள் ஓர் எச்சரிக்கை - Dr.Sவெங்கடாசலம்

ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் அடிப்படை கோட்பாடுகளும், சிகிச்சைக்குரிய நடைமுறைகளும் வெவ்வேறாக உள்ளன. ஆங்கில மருத்துவம் பிற மருத்துவ முறைகளைக் கிள்ளுக் கீரையாக கருதுகிறது. ஹோமியோபதியின் தந்தை டாக்டர் ஹானிமன் உட்பட பல மேதைகளை ஆங்கில மருத்துவ உலகம் அவமானப்படுத்தியது, துயரப்படுத்தியது. ஆயினும் வாழத் தகுதியுள்ளது வாழும் (survival of the fittest) என்ற அறிவியல் உண்மைப்படி ஹோமியோபதி உலகமெங்கும் பரவி வெற்றிக் கொடி நாட்டி வருகிறது. விபத்துக்களிலும், பிரசவ காலத்திலும் தவிர்க்க இயலாத அறுவைச் சிகிச்சைகளிலும், அழகுக் கலை அறுவை சிகிச்சைகளிலும் மட்டுமே தேவைப்படக் கூடிய மருத்துவமாய் ஆங்கில மருத்துவத்தின் எதிர்காலத்தில் எல்லை சுருங்கிப் போகும். ஐம்பத்தியொரு வியாதிகளை ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்தவே இயலாது என்று உலக நலநிறுவனம் (who) அறிவித்துள்ளது. உண்மையைச் சொன்னால் இது உண்மையில் ஒரு சிறு பகுஇதியே சரியாகச் சொன்னால் பல்லாயிரக்கணக்கான வியாதிகளை ஆங்கில மருத்துவமே உற்பத்தி செய்து வருகிறது.

ஆயினும் விஞ்ஞான வளர்ச்சி, ஆய்வுக் கருவிகளின் வளர்ச்சிப் பின்னனியில் மனித உடல்கூறு இயல், உடலியங்கியல், நோயியல் குறித்த அறிவுசார்ந்த விவரங்களை ஹோமியோ மருத்துவர்களும் அறிந்து தெளிவு பெற்று வருகின்றனர். ஹோமியோபதிக்குரிய அடிப்படை விதிகளின் படி சிகிச்சையளித்த போதிலும் அறிவியல் தகவல்களையும் உடலியல் ஞானத்தையும் தேவையற்றவை எனப் புறக்கணிக்க முடியாது. அவற்றிலுள்ள முரண்பாடுகளைத் தவறுகளை, நீக்கி மக்களுக்குரிய மருத்துவ அறிவியலாக மலரச் செய்ய வேண்டிய பொறுப்பு ஹானிமன் தொண்டர்களுக்கு உண்டு. ரத்த அழுத்தம் குறித்து எண்ணற்ற ஆய்வுகளும் விளக்கங்களும் வாழ்நாள் முழுதும் சாப்பிட வேண்டிய மருந்துகளும் பற்றி ஆங்கில மருத்துவம் பரப்பியுள்ள விஷயங்களோ பெரும்பாலும் காணப்படுகின்றன. உடலில் ரத்த ஓட்டம் நிகழும் போது ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் மீது அழுத்தம் ஏற்பட்டு ரத்தக் குழாய் விரிந்து சுருங்குகிறது. இருதயம் ஒவ்வொரு முறை சுருங்கும் போதும் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இந்தக் சுருக்கழுத்தத்தை மேல்நிலை அழுத்தம் (Systolic Blood Pressure) என்று கூறப்படுகிறது. இருதயம் பழைய நிலைக்கு வரும் போது அழுத்தம் குறைகிறது. இந்த விரிவழுத்தத்தை ‘கீழ்நிலை அழுத்தம்’ (Diastolic Blood Pressure) என்றும் கூறப்படுகிறது. ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவிக்கு ‘ஸ்பிக்மோ மோனோமீட்டர்’ என்று பெயர். ரத்த அழுத்த அளவை மில்லி மீட்டரில் குறிப்படுவது வழக்கம்.

கீழ் அழுத்தம் 60mm முதல் 90mm வரையும் மேல் அழுத்தம் 100 mm முதல் 140 mm வரையும் இருக்கலாம் எனப்படுகிறது. நடுத்தர வயதில் 120 mm/80 mm ரத்த அழுத்தம் கானப்படுகிறது. இதுவே சராசரியான ரத்த அழுத்த அளவாக கருதப்படுகிறது. அதிக ரத்த அழுத்தத்தை (ரத்தக் கொதிப்பு) Hypertension என்றும் குறைந்த ரத்த அழுத்தத்தை Hypotention என்றும் அழைக்கப்படுகிறது. அதிக உணவு, அதிக உடல் எடை, உணவில் அதிக உப்பு, கொழுப்பு சேர்த்தல், சத்தில்லாத உணவுப் பழக்கம், காபி, தேயிலை, புகை, மது, போதைப்பழக்கம், போதிய உடற்பயிற்சியில்லாமை, குறைவான உடலுழைப்பு அல்லது தொடர்ந்த நீடித்த கடும் முயற்சிகள், சர்க்கரை வியாதி, சிறுநீரக வியாதி, கருத்தடை மாத்திரைகள் (Contraceptive Pills), ஈஸ்ட்ரோஜன், ஹார்மோன் சிகிச்சை, ஸ்டீராயிடு மருந்துகள் போன்ற காரணங்களால் ரத்தக் கொதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ரத்தக் குழாய் சுவர்கள் தடிப்பதாலும் ரத்தக் குழாய்கள் சுருங்குவதாலும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு ரத்தக் கொதிப்பு உண்டாகலாம். ரத்த குழாய்கள் சுருங்குவதற்கும் தடிப்பதற்கும் கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்புச் சத்து முக்கிய காரணமாக உள்ளது. எப்போதும் கவலை, மன இறுக்கம், மன உளைச்சல், ஏமாற்றங்கள், விரக்தி, போட்டி, பொறாமை உணர்வு, அடிக்கடி மன எழுச்சிகளுக்கு ஆட்படுதல் போன்ற காரணங்களாலும் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது. John Hunder என்ற மருத்துவ பேராசிரியர் தாம் பணிபுரிந்த மருத்துவமனையின் பிரச்னைக்க்குரிய (Board Meeting) கூட்டத்தில் கலந்து கொண்ட போது எரிச்சல் அடைந்த நிலையில் ரத்த அழுத்தம் அதிகரித்து இறந்து போனார் என்று நூலொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணர்ச்சிமயமான மேடைப்பேச்சு காரணமாகவும் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் சிலருக்கு தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும். இது பிரசவத்திற்குப் பின்னர் மாறிவிடும். குடும்பச் சூழல், உணவு ஒரே மாதிரியான வாழ்க்கைப் பழக்கங்கள் காரணமாக பாரம்பரியமாகவும் ரத்தக் கொதிப்பு வரக்கூடும். பல்வேறு காரணங்களுக்காக இறந்த சில கருக்களின் இருதய ரத்தக் குழாய்களை சோதனை செய்த போது இயல்பாகவே, பிறவியிலேயே ரத்த நாளங்கள் தடித்த தன்மை கொண்டவையாக, பல்வேறு இருதய அமைப்புப் பலவீனங்கள் கொண்டவையாக இருந்ததை மருத்துவ உலகம் கண்டுள்ளது. எனவே தான் பேராசிரியர் பாய்டு கீழ்கண்டவாறு கவிதை நடையில் குறிப்பிடுகிறார்.

It is the end of the song
That has been sung in the cradle

இவனது இறுதிப்பாட்டு என்றாலும் இதன் தொடக்கப்பாட்டு – இவனது தொட்டிலில் தொடங்கிய பாட்டு மிகை ரத்த அழுத்தம் நீடிப்பதால் இருதயம், சிறுநீரகம், மூளை மற்றும் ரத்தக் குழாய்கள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. இதனால் ஆயுள் குறைவதாகவும், மாரடைப்பு மூலம் அகால மரணம் நிகழும் ஆபத்து உள்ள தாகவும் கூறப்படுகிறது. மேலும் ரத்தக் கொதிப்பு காரணமாக உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைதல், நாளமில்லா சுரப்பிகள் பாதிக்கப்படுதல், மூளையில் ரத்த நாள வெடிப்பு, ரத்தக் கசிவு (Cerebral Hemorrhage) மூளை ரத்தக் குழாய்க ளில் ரத்தக் கட்டிகளால் ஏற்படும் அடைப்பு (Cerebral Thrombosis) அதன் காரணமாக ஏற்படும் பக்கவாதம், விழித்திரையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் தடிபு, ரத்தக் கசிவினால் ஏற்படும் பார்வைக் குறைவு, தலைவலி, தலைப்பாரம், எளிதில் களைப்பு, தூக்கமின்மை அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மூச்சுத்திணறி அலறி விழித்தல் நெஞ்சு படபடத்தல், கிறுகிறுப்பு, காது இரைச்சல் போன்ற உடல் இயக்கக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

ரத்த அழுத்தம் ஒரு மோசமான நோய். எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய நோய் சாகும் வரை BP மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது. இதுநாள் வரை ஞானிகள் எல்லோருமே இந்த உலகத்தை வியாக்யானம் மட்டுமே செய்துள்ளனர். ஆனால் இதை மாற்றியமைப்பது ஒன்றே பிரதான தேவை என்று கார்ல்மார்க்ஸ் விளம்பியதைப் போல நோய்கள் குறித்த விளக்கங்களும், அறிவுரைகளும் மட்டுமே போதுமானவை அல்ல. நோயுற்ற மனிதனை நோயற்ற மனிதனாய் மாற்றுவது ஒன்றே பிரதான தேவை. 

ஆங்கில மருத்துவம்  BP பற்றி விளக்கங்களை யும், காரணங்களையும் Scietific Diagnosis என்ற அடிப்படையில் விவரிக்கிறது. Practical Diagnosis என் செயல்வடிவ அணுகுமுறை இல்லை. எனவே ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல, இருதயம், சிறுநீரகம், மூளை நரம்பி மண்டலம் சம்பந்தப்பட்ட எந்த வியாதியையும் ஆங்கில மருத்துவம் ஒரு போதும் குணப்படுத்த இயலாது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாக கூறுவதும் பொய். ரத்த அழுத்த மாத்திரைகள் இருதய இயக்கத்தைச் சீர்குலைத்து இருதயத்தின் இறுதியாத்திரைக்கு விரைந்து அழைத்துச் செல்லக் கூடியவை என்பது தான் மெய். ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல, அதன் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற வியாதிகளையும் மூளையில் ஏற்படும் ரத்த உறைவுகளையும், ரத்தக் கசிவுகளையும் ஹோமியோபதி சிகிச்சை மூலம் (எந்தவித அறுவை சிகிச்சைக்கும் அவசியமின்றி) குணப்படுத்த முடிகிறது. பக்கவாதம் தாக்கிய பாகங்களை செயல்படவைக்க முடிகிறது. ரத்தக் கொதிப்பு ஓர் தனிப்பட்ட நோயல்ல. அது உயிர்மையப் பாதிப்பின் ஓர் அறிகுறி. ரத்த அழுத்தத்திற்கான இருதய நிபுணர்கள் எழுதும் மாத்திரைகள் ஒவ்வொன்றும் இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் என்று ஒவ்வொரு உறுப்பாகச் சீரழித்து சின்னா பின்னப் படுத்தக் கூடியவை. ஹோமியோபதி மருந்துகள் மனிதனை முழுமையாக ஆய்வு செய்து அளிக்கப்படும் போது இயற்கையான வழிமுறைகளில் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கச் செய்து, உடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி, உறுப்புக்களுக்கு சக்தியளித்து மனிதனையே புதுப்பிக்கின்றன.